புதுடெல்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது புஷ் பங்காஷ் பகுதியில் நடந்த கொலைகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தான் காரணம் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்விதி குப்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, டைட்லர் தொடர்பான ஆவணங்களை வெள்ளியன்று(இன்று) தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
The post டைட்லருக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு appeared first on Dinakaran.